(நா.தனுஜா)
மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்திருப்பதற்குத் தீர்மானித்திருக்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கையும் ஒரு அங்கமாகும் என்ற அடிப்படையில், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்துவது என்பது மிக முக்கிய பிரச்சினையாகும்.
எனவே மிகவும் குரூரமானதும், இழிவானதுமான மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் உறுதிபூணுவதுடன், அதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அழைப்பு விடுத்துள்ளார்.
மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றின் ஊடாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
நாட்டில் மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதென்பது மிகவும் முக்கியமானதொரு பிரச்சினையாகும். மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்கும் தீர்மானத்தை மேற்கொண்ட பல்வேறு சர்வதேச நாடுகளில் இலங்கையும் ஓரங்கமாகும். அதேபோன்று மரணதண்டனையை இல்லாதொழிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மரணதண்டனையை நிறைவேற்றுவதில் ஒரு இடைநிறுத்தலைக் கோரும் 7 தீர்மானங்களில் 5 இற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.
நாடொன்றின் அரசாங்கமே தனியொரு நபரின் உயிரைப் பறிப்பதென்பது மிகவும் கொடூரமான தண்டனையாகும். என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் குரூரமானதும், இழிவானதுமான தண்டனை முறையொன்றாகும்.
மேலும் சட்டமுறையின் குறைபாடுகள் காரணமாக நிரபராதி ஒருவர் தண்டிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படும் அதேவேளை, மரணதண்டனையின் ஊடாகக் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே இத்தகைய மோசமான மரணதண்டனை முறைமையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் உறுதிபூண்டு, ஒன்றிணைய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM