ஹொங்கொங் தலைவர் காரிலாம் அந்தப் பிராந்தியத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விசாரணைக்காக சீன பிரதான நிலப் முடிவுக்கு பகுதிக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிப்புச் செய்துள்ளார்.
ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பைச் செய்தார். அந்த சட்டமூலம் தொடர்பான அரசாங்கத்தின் பணி முற்றுமுழுதாக ஒரு தோல்வியாகவிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த சட்டமூலம் முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அந்த சட்டமூலத்திற்கு எதிராக ஹொங் கொங்கில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களையடுத்து அந்த சட்டமூலத்தின் அமுலாக்கம் ஏற்கனவே காலவரையறையின்றி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அரசாங்கத்தின் நேர்மை தொடர்பான சந்தேகங் கள் மற்றும் அரசாங்கம் சட்ட சபையினூடாக அந்த சட்டமூல த்தை மீண்டும் முன்னெடுக்கலாம் என்ற கவலைகள் தற்போதும் நீடித்துள்ளதாக குறிப்பிட்ட காரி லாம், ''அதனால் அத்தகைய திட்டம் எதுவும் இங்கு இல்லை என்பதையும் அந்த சட்டமூலம் மரணித்து விட்டது என்பதையும் நான் இங்கு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
அந்த சட்டமூலம் 2020 ஆம் ஆண்டு தற்போதைய சட்டமன்ற தவணை முடிவு றும் போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் இதற்கு முன் கருத்து வெளியி டுகையில் தெரிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM