இங்கிலாந்தினை இறுதிப்போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டால் எங்கள் ஓய்வறையில் கடவுள் அமர்ந்திருப்பார் என எதிர்பார்க்கின்றோம் என இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை இந்திய அணி 2019 உலக கிண்ணப்போட்டிகளிற்காக முதல் தடவை எதிர்கொண்டவேளை கடவுள் எங்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தார் என தெரிவித்துள்ள ரவிசாஸ்திரி இறுதிப்போட்டியில் நாங்கள் இங்கிலாந்தை எதிர்கொண்டால் அவ்வேளையும் அவர் கடவுள் எங்கள் ஓய்வறையில் அமர்ந்திருப்பார் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக உலககிண்ண தொடரில் இதுவரை ஐந்து சதங்களை பெற்றுள்ள ரோகித்சர்மாவிற்கும் ரவிசாஸ்திரி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ரோகித்சர்மா தலைசிறந்த ஒருநாள் வீரர்களில் ஒருவர் என குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி இவர் இந்த தொடரில் ஓட்டங்களை பெற்றிருக்காவிட்டாலும் அவர் மிகச்சிறந்த வீரரே எனவும்தெரிவித்துள்ளார்.
அவர் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை பெற்றுள்ளார் அதனை இதுவரை யாரும் செய்யவில்லை, ஆரம்ப வீரராக அவர் இந்தியாவிற்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிவருகின்றார் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM