வேட்புமனு விவகாரத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தேசத் துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால், அது நான்தான் .மத்திய அமைச்சர் பதவி இரண்டு முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான். என் குடும்பத்திலிருந்து யாரும் எந்த பதவிகளுக்கு வர மாட்டார்கள்.
தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் தான் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டேன். என் தொண்டர்கள் மட்டுமே எமக்கு உயிர். எனக்குப் பிடித்த இடம் தாயகம். என்னுடைய வேட்பு மனுவை ஏற்றுக்கொண்ட செய்தியால் என் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
வேட்புமனு விவகாரத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. 26 ஆண்டுகளாக கட்சியில் எந்த முடிவையும் தனித்து எடுத்ததில்லை. பதவி பெற்றவர்கள் தான் ம.தி.மு.க.வை விட்டு சென்றார்கள். இலட்சியத்திற்காக இருப்பவர்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM