(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவிலுள்ள ' சிறு பிள்ளைகள் ' சிலர் தமக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டணியை எதிர்க்கிறார்கள் என்று அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பது தொடர்பில் இது வரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் 25 யோசனைகளுக்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் தலைமைத்துவம் உள்ளிட்ட ஏனைய முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும். சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் எதிர்வரும் நாட்களில் உள்ளக பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஆனால் இருதரப்பிற்குமிடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கான தினம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் கூட்டணி நிச்சயம் சாத்தியமாகும். பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து தீர்வுகள் எட்டப்பட்டதன் பின்னர் பதவிகள், அதிகாரங்களை பகிர்த்தல் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM