மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமர வீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில், எவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவர் நிசங்க யாப்பா சேனாதிபதி உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு கடந்த வார இறுதியில் சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதையடுத்து ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமர வீர நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பாட்டார். இந் நிலையிலேயே அவர் இன்று காலை காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM