(ஆர்.விதுஷா)
சுகாதார அமைச்சில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படும் ஊழல் மோசடி முறைகேடுகள் தொடர்பில் தாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து சுகாதார,சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன நழுவ முற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித ஹேரத் கூறியதாவது,
சுகாதார அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் அமைச்சர் ராஜித செனாரத்னவின் மீது நாம் முன்வைத் திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவையாகும். அந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து நழுவும் வகையிலான கருத்துக்களையே அமைச்சர் தொடர்ந்தும் கூறி வருகின்றார்.
களுத்துறையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மீதான தாக்குதல் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்துள்ளோம். இருப்பினும் அது தொடர்பில் இது வரையில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை இதுவரையில் தனியார் வைத்தியசாலையாகவே இயங்கி வருகின்றமை குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர் அளித்த வாக்குமூலத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் வைத்திய சாலைக்கு மக்களின் பணம் அநாவசியமான முறையில் செலவிடப்படுகின்றது. ஆகவே அதனை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை சுகாதார அமைச்சின் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். புற்றுநோய்க்கான மருந்துப்பொருள் கொள்வனவின் போது தரமற்ற மருந்துப் பொருள் கூடிய விலையில் கொள்வனவு செய்யப்படுகின்றன.
அவசர தேவை என்று கூறப்பட்டே இந்த மருந்துப் பொருள் கொள்வனவு இடம் பெற்றுள்ளது.அவசர தேவைக்கான மருந்துக் கொள்வனவு என்று கூறுப்பட்டே இந்த கொள்வனவுகள் இடம் பெறுகின்றன இவ்வாறு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மருந்துப்பொருள் மாபியாவை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறான ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கதவறும் பட்சத்தில் நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன்,புதிய புற்றுநோய்கான மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்ய இயலாத துர்ப்பாக்கிய நிலை உருவாகும்.
ஆகவே, சுகாதார அமைச்சினுள் இடம் பெறும் இத்தகைய மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்துவதுடன்,அது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரையும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM