இரு பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பொலிஸ் அதிகாரி கத்தரிக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பதுளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய டி.எம்.சோமபால என்ற பொலிஸ் அதிகாரியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(8) இரவு பதுளை மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தின் முன்பாக இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சக பொலிஸ் அதிகாரி கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதும் பதுளை நீதவான் நீதிபதி குறித்த அதிகாரியை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விலக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
பதுளை மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி இரு பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மேற்படி மோதலுக்குக் காரணம் என விசாரணையை மேற்கொண்ட பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM