(எஸ்.அஷ்ரப்கான்)
அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக காதிரிய்யா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த எம்.சீ.எம்.யாசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்துவந்த அஸ்மி அப்துல் கபூர், கட்சியின் ஏனைய மாநகர சபை உறுப்பினர்களுக்கும் பிரதி மேயர் பதவி வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் குறித்த தனது பதவியினை இராஜினாமாச் செய்திருந்தார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசில் எம்.சீ.எம்.யாசீர் தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்ரமரத்னவினால் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜுலை 4ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இவர் தனது கடமைகளை இவ்வாரம் மாநகர பிரதிமேயர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM