யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (08) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆளுநரை சந்தித்து தனது ஓய்வு குறித்து தெரிவித்துக்கொண்டார்
போருக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் திறமையாக செயற்பட்டமையை பாராட்டிய ஸ்ரீ ஆளுநர் இந்த சேவையை ஆற்றியமைக்கு தனது நன்றியினையும் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை மக்களுடன் நட்புறவுடன் சேவையாற்றிய கட்டளைத் தளபதியை யாழ் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்த ஆளுநர், ஓய்வு பெற்றாலும் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பினை நினைவு கூரும் வகையில் ஆளுநர் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு நினைவுப்பரிசினை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM