(நா.தனுஜா)
நாட்டில் ஆண்டாண்டு காலமாக சிங்கள பௌத்தத்திற்கு அனைத்து விதங்களிலும் ஆட்சியாளர்களால் முன்னுரிமை வழங்கப்பட்ட வந்தமையில் உச்சகட்ட விளைவே கண்டியில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாடாகும் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
இனிமேல் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆளப்போவதில்லை. மாறாக சிங்கள பௌத்த இனவாதம் தான் நாட்டை ஆட்சி செய்யப் போகிறது.
நாட்டின் எதிர்காலம் பாரிய இருளுக்குள் பிரவேசிக்கப் போகின்றது. இந்நிலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே எமக்கான விடிவை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபலசேனா அமைப்பினால் நேற்று கண்டியில் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநாட்டில் உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்நாடு சிங்களவர்களுடையது என்றும், தனிச்சிங்களப் பாராளுமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கூறியதுடன், அவருடைய கருத்துக்கள் பெரும்பாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்திருந்தன. இந்நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட போதே அருட்தந்தை சக்திவேல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM