தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக்கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக செயற்றிட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான இந்த செயற்றிட்டம் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர்களாகும்.
இந்த கோபுரத்தின் கீழ்மட்ட மூன்று மாடிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள எட்டு மாடிகளில் இரண்டு மாடிகள் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் ஆலோசகர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாடியிலும் சுமார் 400 பேர் உள்ளடங்கக்கூடிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தில் 250 வாகனங்கள் நிறுத்துவதற்கான தரிப்பிட வசதிகளும் உள்ளன.தொலைத்தொடர்பு நெறிப்படுத்தல் ஆணைக்குழுவின் கீழ் இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM