தீப்பற்றி எரிந்த மாடிக் கட்டடமொன்றின் நான்காவது மாடியிலுள்ள ஜன்னலால் தனது 3 குழந்தைகளையும் கீழே தயாராக பிடிக்கப்பட்டிருந்த விரிப்பொன்றை நோக்கி தாயொருவர் வீசிய பரபரப்புச் சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெ ள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பையோங்தேயக் நகரில் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த ஓஸன் விமான தளத்திற்கு அண்மையிலிருந்த அந்த மாடிக் கட்டடத்தில் தீ ஏற்பட்ட வேளை பிறீசியஸ் என்யியோகோ (30 வயது) என்ற மேற்படி தாய் நான்காவது மாடியிலுள்ள தனது வீட்டில் தனது 3 பிள்ளைகளுடனும் வெளியேற முடியாது சிக்கிக் கொண்டுள்ளார்.
அந்தப் பிள்ளைகளது வயதுகள் முறையே 7 மாதம், 2 வயது மற்றும் 4 வயது ஆகும்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அமெரிக்கப் விமானப்படையினரும் உள்ளூர்வாசிகளும் அந்த மாடிக் கட்டடத்திற்கு கீழே விரிப்பொன்றை விரித்துப் பிடித்தவாறு அந்தப் பெண்ணை அவரது பிள்ளைகளைத் தூக்கி விரிப்பின் மீது வீச ஊக்கப்படுத்தினர்.
மாடியிலிருந்து வீசப்படும் குழந்தைகள் சரியாக விரிப்பின் மீது விழுந்து உயிர் தப்புமா இல்லையா என்ற சந்தேகத்தின் மத்தியில் எவ்வாறாவது தீயிலிருந்து தனது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற தீவிரத்துடன் அந்தத் தாய் தனது 3 பிள்ளைகளையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கி கீழே வீசியுள்ளார்.
இறுதியாக தானும் அந்த விரிப்பில் குதித்துள்ளார். அதிசயிக்கத்தக்க வகையில் அவரும் அவரது குழந்தைகளும் சரியாக விரிப்பில் தாங்கிப் பிடிக்கப்பட்டு எதுவித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இந்நிலையில் பிறீசியஸ் என்யியோகோ உள்ளூர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தீயால் ஏற்பட்ட புகையால் இருண்டிருந்த தனது மாடிக் குடியிருப்பு வீட்டில் தனது பிள்ளைகளின் அழுகுரலுக்கு மத்தியில் இருந்த போது தமது வாழ்வு அத்துடன் முடியப் போகிறது என தான் நினைத்ததாகவும் மாடிக்கு கீழே விரிப்பில் தனது பிள்ளைகளை ஒவ்வொருவராக வீசிய போது தனக்கு இருதயமே நின்றுவிடுவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தான் அந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் வீசும் போதும் 'நான் உன்னை நேசிக்கிறேன்'' என கூச்சலிட்டதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM