விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4ஆவது சுற்றுக்கு ரபெல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருப்பவருமான ஸ்பெய்ன் வீரர் ரபெல் நடால் 6-2, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 72ஆவது இடத்திலுள்ள பிரான்ஸ் வீரர் சோங்காவை எளிதில் தோற்கடித்து 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூகாஸ் பவுல்லியை எதிர்கொண்டார்.
இதில் 7-5, 6-2, 7-6 (4) என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றி ரோஜர் பெடரருக்கு கிடைத்த 350ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், உலக தரவரிசையில் 7ஆவது இடத்திலிருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 71ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 4ஆவது சுற்றுக்குள் நுழைந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM