கிளிநொச்சியில் வறட்சி காரணமாக 3000 குடும்பங்கள் பாதிப்பு

Published By: Digital Desk 4

08 Jul, 2019 | 10:47 AM
image

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக 3426 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த்ட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதேவேளை பல வாழ்வாதாரத்தொழில்களும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது அதிக வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதியாக பூநகரிப்பிரதேசம் காணப்படுகின்றது.

குறிப்பாக, இந்தப்பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீர்த்தடுப்பாடு நிலவுவதுடன். அவரகளது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நீர் நிலைகள் வற்றிக்காணப்படுவதனால் கால்நடைகள் நீர் தேடி அலைகின்ற நிலமையும் காணப்படுகின்றது.

பூநகரிப்பிரதேசத்தின் வறட்சி நிலமைகள் தொடர்பில் பூநகரிப்பிரதேச செயலாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது, பூநகரிப்பிரதேசத்தில் வறட்சியினால்  491 விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது 2087 குடும்;பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் நாட்களில் இந்தத்தொகை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இவ்வாறு பூநகரிப்பிரதேசத்தில் இதுவரை 3426 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08