விஜயகாந்த் ஒரு கூட்டத்திற்காவது, கைத் தாங்கல் இல்லாமல் தானாகவே மேடை ஏறி பேசினால் என் ஒரு பக்க மீசையை எடுத்து விடுகின்றேன் என்று அ.தி.மு.க. பேச்சாளரும் நடிகருமான ஆனந்தராஜ் சவால் விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
தமிழக மக்களை தாய் போல் காப்பாற்றும் ஜெயலலிதாவை கேலி செய்வது அழகல்ல. இப்படி பேசும் விஜயகாந்த் ஒரு கூட்டத்திற்காவது, கைத்தாங்கல் இல்லாமல் தானாகவே மேடை ஏறி, தானாகவே நாற்காலியில் அமர்ந்து, தானாகவே மைக் பிடித்து, பேசமுடியுமா? அதைசெய்தால், எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இது சவால். விஜயகாந்த் ஏற்பாரா?
ஜெயலலிதா மிகப்பெரிய தைரியசாலி, மனிதநேயமிக்கவர். இந்தியாவிலேயே மூன்றாவது பெரியகட்சியாக அ.தி.மு.க.வை மாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் .
தி.மு.க. தலைவர் கருணாநிதி சுயநலவாதி தன் குடும்பம், தன் வாழ்க்கை என்றும் தான் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறார்.
93 வயதிலும் தான் பெற்ற பிள்ளைகள் ஸ்டாலின், கனிமொழிக்காக பாடுபடுகிறார் தமிழக மக்கள் அவரை தோற்கடித்து அரசியலிலிருந்து ஓய்வு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM