மீன்பிடிக்கச்சென்ற நான்கு மீனவர்கள் நடுக்கடலில் படகுடன் காணாமல் போயுள்ளனர். மூன்று நாட்களாகியும் கரை திரும்பாததால் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாம்பன் வடக்கு கடற்கரைபகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவகள் தொடர்பில் மூன்று நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காததால் மீனவர்களின் உறவினர்கயிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 50 நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்தவிட்டு வழக்கம் போல் மறுநாள் காலை கரை திரும்பிய நிலையில் ஸ்டீபன், அந்தோனி, வின்சன்ட், சின்தாஸ் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று வரை கரை திருமப்வில்லை.
இதனையடுத்து கரை திரும்பாத மீனவர்களை மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக சக மீனவர்கள் தேடி வருகின்றனர்..
இந்நிலையில் மாயமான மீனவர்கள் நிலை குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் மினவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மூன்று நாட்களாக கரை திரும்பாத மீனவர்களை பத்திரமாக உயிரோடு மீட்டுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க அமைப்புகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க சென்று கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலில் காணமல் போன சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM