மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள். 3 நாட்களாகியும் கரை திரும்பாததால் அச்சத்தில் உறவினர்கள்

Published By: Digital Desk 4

07 Jul, 2019 | 01:16 PM
image

மீன்பிடிக்கச்சென்ற நான்கு மீனவர்கள் நடுக்கடலில் படகுடன் காணாமல் போயுள்ளனர். மூன்று நாட்களாகியும் கரை திரும்பாததால் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

பாம்பன் வடக்கு கடற்கரைபகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு  மீனவகள் தொடர்பில் மூன்று நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காததால் மீனவர்களின் உறவினர்கயிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்  பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 50 நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள்  மீன்பிடித்தவிட்டு வழக்கம் போல் மறுநாள் காலை கரை திரும்பிய நிலையில் ஸ்டீபன், அந்தோனி, வின்சன்ட், சின்தாஸ் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று வரை கரை திருமப்வில்லை. 

இதனையடுத்து  கரை திரும்பாத மீனவர்களை மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று  கடந்த இரண்டு நாட்களாக சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.. 

இந்நிலையில்  மாயமான மீனவர்கள் நிலை குறித்து இதுவரை  தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் மினவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் மூன்று நாட்களாக கரை திரும்பாத மீனவர்களை  பத்திரமாக உயிரோடு மீட்டுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க அமைப்புகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடலுக்கு மீன் பிடிக்க சென்று கடல் சீற்றத்தால் மீனவர்கள்  கடலில் காணமல்  போன சம்பவம்  மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41