கனடாவின் அல்பேர்ட்டா பிராந்தியத்தில் பரவி வரும் பாரிய காட்டுத் தீ காரணமாக அந்தப் பிராந்தியத்திலுள்ள மக்முர்ரே நகரைச் சேர்ந்த அனைத்து 80,000 மக்களும் இடம்பெயரும் நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளனர்.
காட்டுத் தீயையடுத்து செவ்வாய்க்கிழமை அந்நகரிலுள்ள அனைவரையும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் காட்டுத் தீயால் அந்நகரிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே பாதையாக உள்ள 63 ஆம் இலக்க நெடுஞ்சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிராந்தியத்திலான எண்ணெய் தன்மையான மண் காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீயால் அந்த நகரிலுள்ள வீடுகளும் பெற்றோல் நிலையங்களும் ஹோட்டலொன்றும் எரிந்து கருகியுள்ளன.
மேற்படி காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக அந்தப் பிராந்தியம் வரலாறு காணாத இடம்பெயர்வொன்றை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி பிராந்திய எதிர்க்கட்சி தலைவரின் வீடும் தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM