(செ.தேன்மொழி)
சப்புகஸ்கந்த பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவரை இன்று கைதுசெய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தலுவ - மான்புரிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 5 தங்க சங்கிலிகள் ,6 தங்க பென்டன்கள்; , 2 பஞ்சாயுதங்கள் ,6 மோதிரங்கள் ,8 ஜோடி தங்க காதணிகள் உட்பட 62 கரட் எடையுடைய தங்க ஆபரணங்களும் தொலைபேசியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17 ஆம் திகதி களனி பிரதேசத்தின் பட்டிவில -கோனவல பகுதி வீடொன்றில் 43 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் தொகை பணமும் , தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களனி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே சபுகஸ்கந்த பொலிஸாரினால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM