இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்ட நிகழ்வா? 

Published By: Daya

06 Jul, 2019 | 03:57 PM
image

இராணுவத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில்  இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து  காணாமல் ஆக்கபட்ட உறவினர்களால் ஆர்பாட்ட பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டிருந்தது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர்ந்து 868 நாட்களாக  போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டபேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காலை 10.30 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்  கந்தசாமி கோவில்வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக  தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலை செய்து விட்டு களியாட்ட நிகழ்வா, விழித்தெழு தமிழினமே என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09