தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 32 வயதுடைய குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த குறித்த பெண்ணின் கணவர் உணவுக்காக மனைவியை அழைத்ததோடு, அவரைக் கடுமையாகத் தாக்கினார் என்றும், தலையில் தாக்கப்பட்ட மனைவி மயங்கி விழ, கணவர் மண்ணெண்னை ஊற்றித் தீ மூட்டினார் என தெரியவந்துள்ளது.
அதை அவதானித்த 14 வயது மகன் ஓடிச் சென்று தீணை அணைக்க முயன்றார் என்றும், தந்தை கையைப் பிடித்துத் தடுத்தார் என்றும், தந்தையையின் கையைக் கடித்துவிட்டுத் தப்பிச் சென்ற மகன், நீர் ஊற்றித் தீயை அணைத்தார் என பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
அயலில் உள்ளவர்களின் உதவியோடு பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM