மட்டக்களப்பு – புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அவர்களை தாக்கிவிட்டு, பொலிசாரின் கடமை நேர ரிவோல்வர் ரக துப்பாக்கி அபகரிப்பு செய்த சம்பவம் தொடர்பில் இதுவரை 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டு. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் பகல் 1 மணிவரை குறித்த பகுதியை சுற்றிவளைத்து அனைத்து இடங்களிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலிசார் பறிகொடுத்த கை துப்பாக்கி அந்த பகுதியில் இருக்கும் கிணறு ஒன்றில் வீசப்பட்டதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அந்த கிணற்றின் நீரை இறைத்து அதில் தேடுதல் நடவடிக்கையினை மேற்மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இதுவரை 21 பேரை கைதுசெய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்த பகுதியில் இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் மற்றம் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிசார் உட்பட விபத்தில் காயமடைந்த 4 பேர் மட்டு. போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM