ஆயுதக்களைவு மற்றும் தந்திரோபாய ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராகவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று தெரிவித்துள்ளார்.
இத்தாலிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டி யின் போதே அவர் இவ் வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஜப்பானில் இடம்பெற்ற உச்சிமாநாட்டின் போது கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
ஆயுதக் களைவு தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்புச் செய்யும் என அவர் தெரிவித்தார்.
விளாடிமிர் புட்டின் முக்கிய அணு ஆயுத உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை வாபஸ் பெறுவதற்கான சட்டமூலமொன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட இடைநிலை அணு ஆயுதப் படை உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா வெளியேறுவதை நடைமுறைப்
படுத்துவதற்கான ஆணையொன்றை புட் டின் அன்றைய தினம் வெளியிட்டிருந்தார்.
அணு ஆயுதப் போர் ஒன்று ஏற்படும் அபாயத்தை தடுக்கும் முகமாக கைச்சாத்திடப்பட்டிருந்த அந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா ஏற்கனவே விலகியதற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ரஷ்யாவானது தனது இரு புதிய சக்தி வாய்ந்த கப்பல்களை பயிற்சி நடவடிக்கையொன்றுக்காக நோர்வே கடல் பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்திருந்தமை பிராந்தியத்தில் பதற்ற நிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே புட்டின் அமெரிக்காவுடன் ஆயுதக் களைவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தனது நாடு தயா ராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM