காட்டு யானையின் தாக்குதலில் விவசாயி பலி

Published By: Digital Desk 4

04 Jul, 2019 | 03:14 PM
image

கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 பேர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (4) காலை வயலுக்கு தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொண்டையன் கேணி வாழைச்சேனையைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சி.கந்தசாமி 52  வயது என்பரே இவ்வாறு உயிரிழந்த  நிலையில்  மனைவி அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார்.

வாழைச்சேனையில் இருந்து முறுத்தானையிலுள்ள தமது வயலுக்கு இருவரும் செல்லும் போது வேப்பையடி திடல் காட்டு வழிப்பாதையில் மறைந்து நின்ற யானை தங்களை தாக்கியதாகவும் தாம் யானையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்துக்கொள்ள ஓடியதாகவும் கணவர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் மரணமடைந்தவரின் மனைவி  தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை நேற்று மட்டக்களப்பு கரடியனாறு குசலான் மலைப் பிரதேசத்தில் வைத்து பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட 2 பிள்ளைகளின் தந்தையும் காட்டு யதனையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55