(செய்திப்பிரிவு)
உயர் கல்வியை பெற்றாலும் நாட்டை நேசிக்கும் நாட்டின் மீது பற்றுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் வரலாற்றை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று புதன்கிழமை புராதன தொழிநுட்ப நூதனசாலையை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த புதிய தொழிநுட்ப நூதனசாலையானது பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மாணவர்களுக்கு வரலாற்றை எடுத்துரைக்கும் முகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை வல்லுனர்களாகவும் முன்னோடிகளாகவும் திகழவைக்க நினைக்கும் பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளுக்கு நாட்டின் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும். இலங்கை வரலாற்றை புதிய தொழிநுட்பத்துடன் உலகிற்கு எடுத்துரைக்க இந்த புராதன தொழிநுட்ப நூதனசாலை உதவியாக அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM