(செ.தேன்மொழி)
நகர பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுபடுத்தவும் , வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் நாடளாவிய ரீதியில் வாகன ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கொழும்பிற்குள் மாத்திரம் புதிய ஒழுங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 5 ஆயிரத்து 120 பேருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்ட இந்த ஒழுங்கு விதிகளை மீறியதாக குறிப்பிட்டு , கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் இம்மாதம் முதலாம் திகதி வரை 5 ஆயிரத்து 120 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய வீதி ஒழுங்குகளினால் பெருமளவு வாகன விபத்துக்கள் குறைவடைந்துள்ளதுடன், வாகன நெரிசல்களும் குறைவடைந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு வீதி ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துவதனால் வாகன விபத்துகளினால் ஏற்படும் இழப்புகளை கட்டுப்படுத்திற் கொள்ள முடியும்.
சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது இந்த ஒழுங்கு விதிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் தினைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM