(நா.தினுஷா)
நாட்டின் முன்னேற்றாத்துக்கு தேசிய ஒற்றுமைய கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். அதிகாரப் பகிர்வொன்றினூடாகவே தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டி, பதி உதின் மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் தமது அதிகாரப் போராட்டத்துக்காக இனங்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமையை சீர்குழைத்து விட்டனர். அரிசியலமைப்பு உருவாக்கப்பட்டபோதே மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால் தற்போதுள்ள பிரச்சினைகள் நாட்டில் ஏற்பட்டிருக்காது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு தேசிய ஒற்றுமை அவசியமானதாகும். சகலரும் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அனைவரும் நாட்டின் ஒற்றுமை பற்றி சிந்திப்பது அவசியமாகும்.
16 ஆம் நூற்றாண்டு காலப்பகதிகளிலேயே முஸ்லிம் இனத்தவர்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக புத்தளம், பேருவல போன்ற பகுதிகளில் குடியேறினார். அன்று அவர்களக்கு எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை என்றும் வரலாற்றில் சிறுப்பான்மையினருக்காக முன்னுரிமை முறையாக வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM