முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கனேடிய உயர்ஸ்தானிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

Published By: Daya

04 Jul, 2019 | 01:23 PM
image

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய தூதரகத்தின் அரசியல் துறைப்பொறுப்பாளர் மேரி ஜோஸ், இந்தியாவிற்கான கனேடிய தூதுவராலயத்தின் முதன்நிலை செயலாளர் பீட்டர் ப(டீ)ன்டீ அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், ஸ்தாபக உறுப்பினர்கள், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், மகளிர் பிரிவு பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களுக்குப் பின்னரான சமகால நிலைவரங்களை ஆராயும் நோக்கில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் தமது விஜயத்தின்போது பல்வேறு தரப்பினர்களுடனான கலந்துரையாடல்களையும் மேற் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் அரசியல்கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உடனான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது 21ஆம்  திகதிக்கு பின்னரான பிராந்திய மற்றும் தேசிய அரசியல் நிலைவரங்கள் குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற கலாச்சார, பொருளாதார, உரிமை ரீதியான சவால்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நாட்டில்  சட்டத்தின் முன்  அனைத்து பிரஜைகளும் சமம் என்கின்ற நிலை உறுதிப்படுத்தப் படவேண்டும் எனவும், நாட்டின் சட்ட ஒழுங்கும் பாதுகாப்பும் இன, மத பேதங்கள் கடந்து அனை வருக்கும் பொதுவானதாகவும், நீதியை நிலைநாட்டுவதாகவும், சுயாதீனமாகவும் இயங்கவேண்டும் எனவும், அதுவே இந்நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க சிறந்த வழி எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பில்  கலந்துரையாடப்பட்ட விடயங்களை தாங்கள் நிச்சயம் கவனத்தில் கொண்டு, அதனை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், கனேடிய பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04