(நா.தினுஷா)
மாலபே - கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையிலான நவீன இலகு புகையிர போக்குவரத்து பாதையின் நிர்மாண பணிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுமுதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிர்மாண பணிகளுக்கு ஜப்பான் நாட்டு தொழில் நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு எதிவரும் 2024 -2025 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்த புகையிரத பாதை நிர்மாண பணிகளை நிறைவுசெய்ய முடியும் என எதிர்பாரக்கப்படுனகிறது.
இந்த மாலபே - கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையிலான இந்த இலகு புகையிர சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்ற கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
பாரிய நகரம் திட்டமிடல் மற்றும் மேல்மாகாண அகபிவிருத்தி அமைச்சர் சம்பி ரணவக்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க , இராஜாங்க அமைச்சர் அசோக அபயசிங்க , இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் எச்.ஈ.அகிரா சுகியாமா , மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலநதுக்கொண்டனர்.
மாலபே - கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த இலகு போக்குவரத்து பாதையின் நிர்மாண பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போதைய பயண நேரமான 45 - 90 வரையான நேரத்தை 32 மணிநேரம் வரையில் வரையறுத்துக்கொள்ள கூடியதாக இருக்கும்.
தற்போது வீதி போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பிரதான பாதையில் மேம்பாலங்களை நிர்மாணிப்பதனூடாக இந்த புகையிரத சேவையை அமுல்படுத்த எதிர்பாரக்கப்படுகிறது. இந்த இலகு போக்குவரத்து சேவைக்கென்று ஜப்பான் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சொகுசுடைய மின்சார புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM