வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்
யாழ் நாவலர் வீதியிலுள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டத்தை மேறகொண்டதுடன் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு ஆளுநருக்கும் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.
மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விசேட மாகாண கணக்காய்வு குழுக்கூட்டம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருவதற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இவ்வாறான தவறுகள் எதிர்காலத்திலும் நிகழாவண்ணம் ஸ்திரப்படுத்தப்படல் வேண்டுமென கோரியுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இவ்வாறான சம்பவங்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிக மன வேதனையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் கவலை வெளியிட்டதுடன் இந்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM