(ப.பன்னீர்செல்வம்)
வெசாக் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் அமைக்கப்படும் அனைத்து தானசாலைகளும் கொழும்பு மாநகர சபையில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதற்கு 2696594 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜேமுனி மேலும் தெரிவிக்கையில்,
வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் அமைக்கப்படவுள்ள அனைத்து தானசாலைகளும் மாநகர சபையின் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் மாநகர சபையால் வழங்கப்படுகிறது அதனை பெற்று முழுமைப்படுத்தி வழங்கினால் உடனடியாக பதிவு செய்யப்படும். அதன் பின்னர் தானசாலைகளில் உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்போது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்படும். இதன் மூலம் உணவுகளின் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்துவதே நோக்கமாகும்.
எனவே கட்டாயம் கொழும்பு மாநகரில் அமைக்கப்படவுள்ள தானசாலைகள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.
அத்தோடு இனிப்பு குறைந்த உணவுவகைகளையும், குளிர்பானங்களையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு தானசாலைகள் நடத்துவோரிடம் வேண்டுகோளை முன்வைப்பதாகவும் டாக்டர். விஜேமுனி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM