அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகளை  அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த முயற்ச்சி  : ஹெக்டர் அப்புஹாமி 

Published By: R. Kalaichelvan

03 Jul, 2019 | 05:01 PM
image

(நா.தினுஷா)

அமெரிக்காவுடனான  மூன்று ஒப்பந்தங்களையும் மையமாக  கொண்டு எதிரணயினர் அரசியல் இலாபம் காணவே முயற்சிக்கிறார்கள். இந்த ஒப்பந்தங்களால்  எமக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றும்  மிலேனியம் சவால்கள்  கூட்டு ஒப்பந்தத்தினூடாக 680 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

அலரிமாளிகையில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் , இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்  சம்பவங்களை  தொடரந்து  சிலர்  நாட்டின் இனவாத கருத்துக்களை தோற்று வித்து குழப்ப நிலையை தோற்றுவிக்க முயற்சித்தனர்.

 ஆனால் அது அவர்களின்  எதிர்பாரப்புக்கு பலனளிக்கவில்லை. இந்நிலையில்  தற்போது  அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை எதிரணியினர் முன்வைத்து வருகின்றனர்.  

1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்திலேயே படைகளின் அந்தஸ்து (சோபா) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.  இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க இதுவரையில்  அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கலந்துரையாடல்கள் மாத்திரமே தற்போது  இடம்பெற்று வருகின்றது.  

அதனை அடுத்து  2007 ஆம் ஆண்டு  கோத்தபாய ராஜபக்ஷவினால்  எக்ஷா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.  இந்த ஒப்பந்தத்துக்கான 10 வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த மீள் பரிசீலனை நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருகிறது. கால எல்லை நிவைடைந்து  180 நாட்டுகளுக்குள்  இந்த ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகி கொள்ள கூடிய வகையிலான புதிய ஏற்பாடொன்றும்  கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27