(ஆர்.விதுஷா)
இலங்கை மின்சார சபையில் மின்வலு , எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை ஜனாதிபதி பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'சிறந்த எதிர்காலத்திற்கான -ஊழலற்ற நாடு ' அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை மின்வலு அமைச்சின் கீழ் கொண்டு வந்து ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை ஒடுக்கும் நடவடிக்கைகளை அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னெடுத்துள்ளார்.இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேல்மாகாண அழகியல் விடுதி ( நாடா) யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைப்பின் செயலாளர் அனில் ரணசிங்க கூறியதாவது, மக்களின் நலனுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றனர். இந்த நிலையில் மின்சாரக் கட்டணத்தை தீர்மானித்தல், மின்சார கொள்வனவுக்கான அனுமதியை வழங்கல் போன்ற செயற்பாடுகளின் போது மக்களின் நலனுக்காக செயற்படும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை மின் வலு அமைச்சின் கீழ் கொண்டு வருவதனூடாக அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை அமைச்சர் கருணாநாயக்க மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் கருணாநாயக்கா ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் மின்சாரப் பாவனையாளர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பல ஆலோசனைகள் உள்ளடங்கியுள்ளன. அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் அவற்றை இதுவரையில் செயற்படுத்துவதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அந்த ஆலோசனைகளில் ஒன்றாக சூரிய மற்றும் காற்று சக்தியின் ஊடாக மின்சாரத்தை பெறும் ஆலோசனையும் உள்ளடங்குகின்றது. இலங்கை மின்சார சட்டத்திற்கு அமைய ஒப்பந்த முறையினூடாகவே மின்சார கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும். அதற்கான அனுமதியை வழங்கும் ஆணைக்குழுவாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு காணப்படுகின்றது. மாறாக இந்த ஒப்பந்த முறைமையை பின்பற்றாமல் அமைச்சர் தன்னிச்சையான முறையில் செயற்படுகின்றமையினால் மின்சார பாவனையாளர்கள் பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஒப்பந்தங்கள் இடம்பெறும் மின்சார கொள்வனவிற்கான அதிகாரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைத்தால் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி போன்று மின்சாரசபையிலும் ஏற்படும். இத்தகைய நிலையில் மின்சாரக்கட்டணத்தை அலகொன்றுக்கு 7 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், மின்சார பாவனையாளர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஆகவே அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM