இந்தியாவில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில், தமிழ்பேசும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோர் நிகழ்ச்சியே பிக்பொஸ். இந்நிகழ்ச்சி பல மொழிகளில் பல்துறை பிரபலங்களைக் கொண்டு நடாத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில், தமிழில் 2 சீசன்கள் வெற்றிகரமாக முற்றுப்பெற்றுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான அங்கமாக சீசன்3 நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சினி பிரபலங்கள் உட்பட, இலங்கையை சேர்ந்த இரண்டு போட்டியாளர்களும் பங்கேற்றியிருப்பது முக்கிய அம்சமாகும். இப்போட்டியாளர்களில், நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதாவும் ஒருவராவார்.
இவரை கைதுசெய்ய தெலுங்கானா பொலிஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். கைது செய்வதற்காக சென்னை பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவிற்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலுங்கானாவில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மகள் ஜோவிதாவை கடந்த பெப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா பொலிஸில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட பொலிஸார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வனிதா தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பொஸில் கலந்துகொண்டுள்ளார். இதனால் அவரை கைது செய்ய உதவுமாறு நசரத்பேட்டை பொலிஸாரிடம் தெலுங்கானா பொலிஸார் உதவியை கோரியுள்ளனர்.
இதனையடுத்து வனிதா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM