(இராஜதுரை ஹஷான்)
தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமை தேசிய பாதுகாப்பு எந்த அளவிற்கு பலவீனமாக உள்ளது என்பதை தெளிவுப்படுத்துகின்றது.
புலனாய்வு பிரிவின் ஊடாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தொடர்ந்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், இத்தகவல்களை புலனாய்வு பிரிவினரிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகவும், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
நாட்டு தலைவர், முப்படைகளின் பிரதானியாக உள்ள ஜனாதிபதிக்கு பாதுகாப்பு இல்லாவிடின் நாட்டு மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஜனாதிபதியின் கருத்தினை தொடர்ந்து தேசிய பாதுகாப்பின் பலவீனம் தெளிவுப்படுத்தபபட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM