மட்டக்களப்பு திருகோணமலை வீதி கதிரவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாகரை, நாகபுரம் பால்சேனையைச் சேர்ந்த வீரசிங்கம் சுதர்ஷன் (வயது 30) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது குழந்தைக்கான பால் மா முத்திரையைப் பெறுவதற்காகச் கதிரவெளி பிரதான வீதியில் சைக்கிளில் பயணத்துக் கொண்டிருக்கும்போது திருகோணமலையிலிருந்து வந்த கார் ஒன்று மோதியதில் குநித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
இந்நிலையில் படுகாயடைந்தவர் உடனடியாக வாகரை மாவட்ட வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக காரைச் செலுத்திய அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM