வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராசா வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் பாடசாலை விட்டு மாணவர்கள் வெளியே சென்ற போது குளவி கொட்டியதில் ஒன்பது மாணவர்கள், காவலாளி உட்பட பத்துப் பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராசா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை விட்டு வெளியேறியபோது பாடசாலையிலிருந்து 300மீற்றர் தொலைவிலுள்ள தனியார் காணியிலிருந்த வேம்பு மரத்திலிருந்து கலைந்த குளவிக்கூடு 7 மாணவிகளையும் இரண்டு மாணவர்கள் மீதும் கொட்டியது.
இச்சம்பவத்தை பார்வையிடச் சென்ற பதுகாப்பு காவலாளி உட்பட பத்துப்பேர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இன்று பிற்பகல் சிதம்பரபுரம் வைத்தியசாலையிலிருந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து கல்வி வலயப்பணிப்பாளருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் தற்போது அப்பகுதி இயல்பு நிலைக்குத்திரும்பியுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் இ.தமிழகன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM