(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அதற்கிணங்க மொரட்டுவை தொகுதி அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவும், இரத்தினபுரி தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி பிரியந்த கருணாதிலகவும், மின்னேரிய தொகுதியின் ஹிங்குரொக்கொட பிரதேச சபை எல்லைக்கான அமைப்பாளராக பீ.ஆர்.உடவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று எலஹெர பிரதேச சபை இணை அமைப்பாளராக ரோஹித கத்தொடுவவும், கண்டி, கலகெதர தொகுதி அமைப்பாளராக லால் சிசிர பண்டார கிரிபாகமவும், பிபிலை தொகுதியின் அமைப்பாளராக சட்டத்தரணி ஊதார சொய்சாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சில மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட அமைப்பாளர்களும் இதன்போது ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM