(நா.தினுஷா)
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்த நிலையில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்காக விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா விமான சேவையிடம் கேட்டுக்கெண்டுள்ளார்.
அரசாங்கத்தின் வாராந்த அபிவிருத்தி கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, ஹர்ஷ டி சில்வா, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போதே விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்கு விமான எரிபொருளின் கட்டணத்தையும் குறைப்பதற்க்கும் நடவடிக்கை எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM