(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதாகத் தெரிவித்து நீதிமன்றத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திற்கு சபாநாயகரிடம் பதில் கோரப்பட்டுள்ள போதிலும் அவர் அதனைக் கவனத்திற் கொள்ளவில்லை. சபாநாயகரும் அரசியல் செய்ய முற்படுகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தியே என்னை தெரிவுக்குழுவுக்கு அழைக்கின்றனர். ஆனால் தெரிவுக்குழுவில் சென்று சாட்சியமளிக்க வேண்டிய அவசியமில்லை இல்லை. காரணம் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றமைக்கு ஏற்ப நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதனாலேயே தெரிவுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளேன்.
தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு மறுப்பு தெரிவித்தமையால் நீதிமன்றத்தை நாட வேண்டிய வரும் என்றும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவ்வாறு என் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் அவர்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM