ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா இதுவரை 7 போட்டிகளை எதிர்கொண்டு 5 இல் வெற்றியும் ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளதுடன், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதியின் விளிம்பில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பதால் தனது முழு பலத்தையும் இன்றைய தினம் வெளிப்படுத்தும்.
பங்களாதேஷ் அணி இதுவரை 7 போட்டிகளை எதிர்கொண்டு 3 இல் தோல்வியையும், 3 இல் வெற்றியையும் சந்தித்துள்ளதுடன் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
7 புள்ளிகளுடன் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ள பங்களாதேஷ் அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற முடியும். எனவே அந்த அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? ஆட்டமாகும்.
சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 2 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM