(நமது நிருபர்)
கோத்தபாய ராஜபக் ஷவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.பதுளை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலிருந்து நான் நீக்கப்பட்டிருப்பதாக என்று கூறப்பட்டாலும், நான் ஒருபோதும் அந்தக் கட்சியின் உறுப்பினராக இல்லாததால் அத்தகைய நடவடிக்கை தேவையற்றது. தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயரளவிலான பதவிகளை விட்டு விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான அதிருப்தியினால், அப்போது நான் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுன எனக்கு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக, கோத்தபாய ராஜபக் ஷ இல்லாவிடின், மீண்டும் அந்தக் கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் திகதி பெயரிடவுள்ள வேட்பாளரை நான் எதிர்க்கிறேன்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான உரிமை உள்ளது.
தேசிய உடை அணிபவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண் டும். ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நானும் கூட தகுதியானவன் தான். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்” என வும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM