நாட்டில் நோயற்ற ஆரோக்கியமான மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனால் சுகாதாரத்துறையின் எதிர்கால செயற்திட்டங்களில் நோய்த்தடுப்பு மற்றும் நோய் நிவாரண துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட வைத்தியசாலையை மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் இன்று (01) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி அன்பளிப்பில் 7000 மில்லியன் ரூபா செலவில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, 850 படுக்கைகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை நவீன வைத்திய உபகரணங்களை கொண்ட சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுஇ மருத்துவ கூடம், இரத்த சுத்திகரிப்பு நிலையம்? வதை்தியர்களுக்கும் தாதியர்களுக்குமான புதிய உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி போன்ற வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையுடன் இணைந்ததாக சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், 2020ஆம் ஆண்டளவில் அதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது ஆரம்பிக்கப்பட்டது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தியசாலையை மக்களின் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். இம் வைத்தியசாலையிலுள்ள விசேட CI scanner இயந்திரத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன். சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்ர ஆகியோரும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Jonne Doornewaard மற்றும் இந்திய கொன்சியுலர் நாயகம் பிரேம்குமார் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM