பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விசாரணை அறிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவிருப்பதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபைக்குள் இரத்தம் சிந்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்டமை குறித்து கவலையடைகின்றேன். உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கண்டிக்கின்றேன். மக்களின் நலன்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் கௌரவம் மிக்கதும் அபிமானமுடையதுமான நிறுவனத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது கவலையளிக்கிறது.
பாராளுமன்றத்தின் நிலையியற்கட்டளைச் சட்டங்களை மீறி பல உறுப்பினர்கள் நடந்துள்ளனர். குழப்பம் நடைபெற்ற சமயத்தில் பதிவான ஒலி மற்றும் வீடியோ பதிவுகள், படைக்கல சேவிதர்களின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு நானும், குழுக்களின் பிரதித் தலைவரும், விசாரணைகளை நடத்தவுள்ளோம். இந்த விசாரணை அறிக்கை இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் சபாநாயகரிடம் கையளிக்கப்படும். இன்றையதினம் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதிலும் இது பற்றி ஆராயப்படும் என்றார்.
பாராளுமன்றத்தில் முறையாக நடந்துகொள்ளாத உறுப்பினர்கள் பற்றி சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்றை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான மோதல் சம்பவமொன்று சபைக்குள் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் சிலருக்கும் காயங் கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலை வருமான செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்றிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM