பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளை சீ.சீ.ரி.வி.யின் உதவியுடன் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிரான முறையான நடவடிக்கையை எடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க பிரதி சபாநாயகர் தலைமையில் நிறுவப்பட்டுள்ள குழு நேற்று முதல் விஷேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் முதல் முறையாக இவ்வாறு வருந்தத்தக்க செயல் ஒன்று இடம்பெற்றதை வண்மையாக கண்டிக்கின்றோம். இது ஜனநாயகத்தை கடுமையாக பாதிக்கும் செயற்பாடாகும். எனவே இது போன்ற செயற்பாடுகள் இனிமேலும் இடம்பெறாதிருக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்தித் சமரசிங்க தாக்கப்பட்டார். அமைச்சர் சரத் பொன்சேகா பேசிக்கொண்டிருந்த வேளை ஏற்பட்ட குழப்ப நிலையின் போதே அவர் இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.இவர் சபையினுள் வைத்து தாக்கப்பட்டமைக்கான சீ.சீ.ரி.வி. காணொளி ஆதாரங்கள் உள்ளன.
எனவே சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதும் கட்சி தலைவர்கள் அனைவரும் சீ.சீ.ரி.வீ. ஆதாரங்களை கொண்டு இவ்வாறு மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மன்றினுல் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
இன்று பாராளுமன்றதத்தில் மக்கள் பிரதிநிதி தாக்கப்பட்ட போது சபையை பார்வையிட வந்திருந்த பாடசாலை மாணவர்கள சிலரும் கலந்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கும் தனது பெற்றோர்கள் தெரிவு செய்த அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை நேரில் காண சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
பாராளுமன்றம் போன்ற உயரிய சபையில் எவ்வாறு நடந்து்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான கோவை ஒன்றும் மூன்று மாதங்களுக்கு முன்பு அச்சிட்டு பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இவ்வாறான நிந்தனையான செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.
எமது நாட்டு பாராளுமன்றத்தில் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்றால் அதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பிலான
ஆவணங்களும் உள்ளன. சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற காரணமாகின்றன.
நேற்று இடம்பெற்ற எமது நாட்டின் உயரிய சபையை நிந்தனை செய்யும் வகையிலான செயற்பாட்டிற்கு உயர்நீதிமன்றம் வரையில் செல்வதற்கான சட்டத்திட்டங்கள் உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தி வெகுவிரைவில் இந்தச் செயற்பாடுகள் இனி ஒருபோதும் இடம்பெறாதிருக்கும் வண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாராளுமன்ற சிறப்புரிமை சட்டங்களின் அடிப்படையில் சட்டநடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே இன்று இடம்பெறவுள்ள அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதி சபாநாயகர் திலங்க சுமாதிபால தலைமையிலான குழு வழங்கும் அறிக்கையின் பிரகாரம் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அவருக்கு அதற்கான அதிகாரங்களும் உள்ளன என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக உரையாற்றுகையில்
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பாராளுமன்றத்தில் இரத்தம் சிந்தும் வகையிலான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பேச முற்பட்ட போது சபாநாயகர் அவரை தான் அனுமதி வழங்கும் போது பேசுமாறு பணித்தார். எனினும் அதனை கவனத்தில் கொள்ளாது அவர் பேச முற்பட்ட போதே பிரச்சினை எழுந்தது.
கடந்த மேதின கூட்டத்தின்போது கொழும்பிலும் காலியிலும் மலையகத்திலும் திரண்டு வந்த அரசாங்கத்தின் ஆதராவாளர்களை கண்டு அஞ்சிய கிருளப்னை கூட்டமே இவ்வாறான குழப்ப நிலையை பாராளுமன்றத்தில் ஏற்பட்டுத்த முற்பட்டது.
அவர்களை எதிர்த்து பேசுபவர்களின் கருத்துக்களை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததனால் சபையில் அமைச்சர் சரத் பொன்சேகாவின் பேச்சு இடம்பெற்ற போது குழப்பத்தை ஏற்படுத்தினர்.இது நிந்தனைக்குரிய செயல் என்றே கருதுகின்றோம்.
சபாநாயகர் நீதியான முறையில் தீர்வை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவே தவறு செய்தவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதி சபாநாயகர் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு சுகம் வேண்டி பிரார்திக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM