ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளன.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரையில் இதுவரை 7 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. இதில் 2 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்துள்ளதுடன், இரண்டு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது.
6 புள்ளிகளுடன் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் அரையிறுதிக் கனவு இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டியினால் கலைந்து விட்டது.
எனவே மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அரையிறுக்கான வாய்ப்பை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
மேற்கிந்தியத்தீவுகள் அணியை பொறுத்தவரையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 இல் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.
மூன்று புள்ளிகளுடன் பட்டியிலில் 9 ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஏற்கனவே அரையிறுதி தகுதியை இழந்து விட்டது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதல் அடைய முயற்சிப்பார்கள்.
சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இலங்கை அணி 2 போட்டியிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM