(நா.தினுஷா)
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது என்றும் எந்த காரணத்துக்காகவும் மரணதண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பில் மரண தண்டனை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் வரலாற்றி எந்த தலைவர்களும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 2016 ஐக்கிய நாடுகள் சபை மரண தண்டனையை தடைசெய்வதற்கான யோசனையை முன்வைத்தபோது அதற்கு இலங்கையும் இணக்கம் தெரிவித்துள்ளது. அந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் அன்று ஆதரவளித்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொனராகலை மாவட்டத்தில் நீர் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த நீர்த்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வை அடுத்து ஒப்பேகொட பாடசாலைக்கான புதிய கட்டடம், தெலிவ மகா வித்தியாலத்தின் புதிய கட்டடம், கதிர்காமம் வரத்தக கட்டடடம் உள்ளிட்ட இன்னும் சில கட்டட தொகுதிகளை பிதரமர் திறந்து வைத்தார்.
மாரிஅறாவ நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை திட்டவட்டமாக அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM