(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் இம் மாதம் 10 , 11 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள் அரசாங்கத்தை பாதுகாப்பவர்களாகவே கருதப்படுவார்கள் என்று அக்கட்சியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவுடன் சோபா உடன்படிக்கையில் கையெழுத்திடும் தீவிர முயற்சியை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு சோபா உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டால் அமெரிக்க இராணுவம் உள்நாட்டு வரவழைக்கப்படும். தவறுதலாகவேனும் சிறு விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அது தொடர்பில் உள்நாட்டு பொலிஸில் முறைப்பாது செய்ய முடியாது. அவர்களால் அது தொடர்பில் விசாரிக்கவும் முடியாது. அமெரிக்கா தான் இவ்வாறான விசாரணைகளைக் கூட முன்னெடுக்கும்.
இது எம்முடைய நாடு. ஒரே நாடு ஒரே நீதி என்று இன்று நாம் கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சோபா உடன்படிக்கை செய்யப்பட்டு அமெரிக்கா இலங்கைக்குள் உள்நுழைந்தால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது. காரணம் அமெரிக்கர்களுக்கு எதிராக எம்மால் வழக்கு தொடர முடியாது. இவ்வாறு தான் அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் இலங்கையை காட்டிக் கொடுத்துள்ளது.
எனவே தான் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான தீர்க்கமான யோசனையொன்றை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM