ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளன.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது.
11 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பின் விளிம்பில் உள்ள இந்திய அணி இப் போட்டியில் வெற்றிபெற்று விட்டால் எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்து விடும்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் இதுவரை 7 போட்டியில் விளையாடி 4 இல் வெற்றியும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
முதல் 5 ஆட்டங்களில் 4 இல் வெற்றி பெற்று கம்பீரமாக நடைபோட்டு வந்தபோதம் இலங்கை அணியுடன் அடைந்த தோல்வி அந்த அணிக்கு பாரிய திரும்புமுனையை ஏற்படுத்தியது, அதன் பின்னர் அவுஸ்திரேலிய அணியுடனும் தோல்வியை சந்தித்தது.
இதனால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு சிக்கல் மிகுந்ததாக அமைந்துள்ளது. இந் நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரம் இங்கிலாந்துக்கு அரையிறுத்கு தகுதி பெற முடியும்.
எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய கடப்பாட்டில் இங்கிலாந்து உள்ளது
பலம் பொருந்திய இரு இன்றைய ஆட்டத்தில் களம்காண்பது மைதானத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அத்துடன் இந்திய அணி வழக்கமாக நீலநிற சீருடையில் ஆடும். ஆனால் இரு அணிகளின் சீருடையும் ஒரே நிறம் என்பதால் ஐ.சி.சி.யின் புதிய விதிமுறைப்படி இந்தியாவின் சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இந்திய வீரர்கள் செம்மஞ்சள், நீலம் நிறம் கலந்த புதுமையான சீருடையில் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளனர்.
சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 3 வெற்றியையும், இந்தியா 3 வெற்றியையும் பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM