(ஆர்.விதுஷா)
குருணாகலை -போதனா வைத்திய சாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு ஷியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரதட்ன குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டி.டபள்யு.ஆர். பீ. சேனவிரத்னவிடம் கேட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
வைத்தியர் சாபி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் நாளை பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்.
வைத்தியர் சாபி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ,அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தடை விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து இதுவரை சாட்சிகள் வெளிப்படுத்தப்படவில்லை என குற்றப்புலனாய்வுப்பிரிவு மன்றில் அறிவித்திருந்தது.
அத்துடன், வைத்தியர் சாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பயங்கரவாத ,அடிப்படைவாத அமைப்புக்களடன் தொடர்புகளைப்பேணியதாகன குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானது என விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் சி.ஐ.டி நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.
இந்தநிலையில் , வைத்தியர் சாபி தொடர்பிலான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அத்துரலிய தேரரினால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அறிக்கையை தருமாறு பதில் பொலிஸ்மா அதிபர் கேட்டிருக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM